என் அனைத்து உறவுகளுக்கும் என் இனிய தமிழ் வணக்கங்கள்..
இத்தனை நாள் திருவிழாவின் தொகுப்புக்களையும் தங்களுடன் பகிர்ந்ததையிட்டு மிகவும் மன மகிழ்வுடன் விடைபெறுகிறோம். உலகம் முழுதும் பரந்த வாழும் எம் இனிய சொந்தங்களை இவை சேர்ந்ததை அறிந்த போது மிகவும் பெருமிதப்பட்டுக் கொண்டோம்.
அந்த 10 நாட்களும் பலர் என்னோடு தோள் கொடுத்து இதற்காக உதவினார்கள் அனைவருக்கும் நன்றிகள் முக்கியமாக இத்தளத்திற்கான படங்களை பெற உதவியவர்களை நினைவு கூறியே ஆக வேண்டும்.
சிந்துஜன் சிவலோகநாதன், கஜன் சிவகுமார், ஜெயசீலன் கனகசபாபதி, சிறீகரன் ராஜகோபால் போன்றோர் இரவு பகலாக ஆலயத்திற்காக பாடுபட்டவர்கள். அத்துடன் எம்முடன் இணைந்து கொண்ட டினுசன் ராமஜெயத்திற்கும் எனது நன்றிகள் சேரட்டும்.
அத்துடன் எனது தங்கையான பவதாரணியும் ஒரு பெண்ணாக இருந்தாலும் தான் மற்றவருக்கு சளைத்தவர் இல்லை என்ற உணர்வுடனும் மற்றவர் பொல்லாப்பை கருத்திலே எடுக்காமல் கடைசி வரை கற்பகத்தானுக்காக உழைத்தவருள் ஒருவராவார்.
தேர்த்திரவிழாவின் காணொளியை பெற முழு உதவியாக இருந்த எனது சகோதரனான குகரூபனுக்கும் கட்டாயம் நன்றி சொல்லியே ஆகணும். எமக்கு உறுதுணையாக எமது அடுத்த தலைமுறை வாரிசுக்களும் அயராது உழைத்தது இன்னும் சிறப்பாக இருந்தது.
இன்னும் ஒருவருக்கு இங்கே நன்றி சொல்லாமல் விட்டுச் செல்கிறேன் காரணம் அவரை தனியே கௌரவிக்க வேண்டியிருக்கிறது விரைவில் மீண்டும் எல்லோரும் சந்திப்போம்.
கற்பகத்தானுக்காக உழைத்த அனைவருக்கும் அவர் அருள் பாலிக்கட்டும்
நன்றி
சுதாகரன் தில்லையம்பலம் (ம.தி.சுதா)
படம் - 1
சீலனும் நானும்
படம் - 2
நான், சிந்து,கஜன்
படம் - 3
தங்கச்சி
படம் - 3
டினு
படம் - 4
கரன்
படம் - 5
அடுத்த தலைமுறை வாரிசு
படம் - 6
மடத்தின் ஒரு பகுதி காட்சி
படம் - 7
நானும் கரனும்
எம் 10 நாள் பரபரப்பு வாழ்க்கையில் ஒரு பகுதியில் டினுவின் கமரா கைப்பற்றிய காட்சி ஒன்று
இந்த கணம் வரை கற்பகத்தான் தளத்தில் பார்க்கப்பட்ட இடுகைகளும் தடவைகளும்.
கற்பகத்தானை அதிகமாய் தரிசித்திருப்போர் உள்ள நாடுகள்.









3 comments:
சகோதரா நம் இளைய சமுதாயத்தின் உழைப்பை நான் நின்ற ஒரு சில நாட்களில் தெரிந்து கொண்டேன் , நம் ஊரின் எதிர்கால சந்ததிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியும் ஆரோக்கியமான ஒன்று, {எந்த முயற்சிக்கும் தடைகள் வரும்தான்......}
அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள்!
தொடரட்டும் உங்கள் பணிகள்.
அருமையான படங்கள். சிறப்பான பதிவேற்றம்.பாராட்டுக்கள்.
கருத்துரையிடுக