வணக்கம் உறவுகளே
இன்று ஒரு உறவுக்கு நன்றி சொல்லும் முகமாகவே இந்தப் பதிவில் சந்தித்துக் கொள்கிறோம். எம் ஊரின் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒரு உறவுக்காரர் தானாக முன் வந்து நல்லெண்ண அடிப்படையில் ஒரு தொகைப் பணத்தை தந்திருந்தார். அதனடிப்படையில் மாணவரிடையே ஊக்கப்படுத்தும் முகமாக பரீட்சை ஒன்றை நானும் , ஜெயசீலனும் இணைந்து முன்னெடுத்தோம்.இதற்கு ஆசிரியர்களானா சசிக்குமார். சுதேசினி, விமலா, நளினி போன்றோர் முழு ஒத்துழைப்பும் வழங்கி பரீட்சை தாள்களை ஒழுங்கமைத்து சிறப்புற முடித்துத் தந்தார்கள். அத்துடன் பங்கு பற்றிய 38 மாணவர்களும் நாம் எதிர் பார்த்ததை விட சிறப்பாகவே பெறு பேறுகளை பெற்றுத் தந்தார்கள்.
ஆரம்ப போட்டியாகையால் மாணவரிடையே ஒரு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சம அடிப்படையிலேயெ பரிசு வழங்கப்பட்டது. பரிசு வழங்கல் நிகழ்வு திருவிழாவை அண்டி ஒழுங்கமைக்கப்பட்டாலும் நேர ஒழங்கமைப்பில் எற்பட்ட தடங்கல் காரணமாக பிற்போடப்பட்டது அனால் மாணவர்களின் ஒன்று கூடல் தடங்கலால் சனசமூக நிலையத்திலேயே சாதாரணமாக நிகழ்வை நிகழ்த்து முடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை எற்பட்டாலும் யாருடைய மனமும் கோணாமல் சிறப்பாகவே நிகழ்த்தி முடிக்ககக் கூடியதாக இருந்தது. சரி இந்தளவும் சொல்லி விட்டு அந்த உறவை சுட்டிக்காட்டாமல் போகலாமா ? அவர் வேறுயாருமல்ல ”எங்க ஊர் இலக்கணாவத்தை” முகப்புத்தகத்தை உருவாக்கி எம் உறவுகள் பலரை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திரு. மு. லிங்கம் தான் அந்த நன்றிக்குரியவர்.. இந்த இடத்தில் அவருக்கு நன்றி கூறிக் கொள்வதுடன்.. நாளை காலை 11 மணிக்கு கனடாவில் எமது உறவுகள் அனைவரும் ஒன்று கூட உள்ளார்கள். ஆர்வமுடைய அனைவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். இத்தகவலை எம் ஊர் ஒன்றியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்தது.. மேலதிக விபரங்களுக்கு ஒன்றியத் தலைவர் திரு.மு. லிங்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்கள்